மாயகட்டுகள்!
கிஷ்கிந்தா,எம்.ஜி.எம்,வி.ஜி.பி
செயற்கையான பிளாக்தண்டர் பூங்காக்கள்
ஜெட்டிக்ஸ்,கார்ட்டூன்,சுட்டி டி.வி_என
பெற்றோரைத் தாண்டி
பெரிய அளவில் மனித முகங்களை
பார்த்தறியாத பாப்பாக்கள்
தன் முகத்தை தானெ பார்த்து
சிரிக்கின்றன வீட்டுக்குள்
வெற்று உலகோடு
வெறுமனே பேசிக்கொண்டு
வாசலில் காவலிருக்கும்
வெள்ளை வேட்டி தாத்தாக்கள்
ஏனோ ஒரு கட்டுக்குள்!
உண்மைதான் சில்லு,
ReplyDeleteகுழந்தகளுக்கு அறிவு வளரும் அளவு, அன்பு குறைகிறதோ என்ற அச்சம் இருக்கிறது.