Monday, May 25, 2009

வாரா வார‌ம்! ஆர‌வார‌ம்!

என்ன‌வ‌னே!
           வாரா வார‌ம்
           பார்க்க‌ வ‌ருகிறாய்
           ஆர‌வார‌மாய்

           சொம்பு த‌ண்ணீரில்
           ஆர‌ம்பித்து
           கார‌ம்,இனிப்பு என
           வித‌வித‌மாய்

           உள்ளே போன‌து
           ஜீர‌ண‌மாக‌
           முழுமிராண்டாவையும்
           முடித்துவிட்டு

           கிள‌ம்புகையில்
           கிழ‌ங்க‌ளிட‌ம் ம‌ட்டும்
           சொல்லி செல்கிறாய்
           போன‌தும்
           ப‌தில் சொல்கிறேன் என்று

           மீண்டும் அடுத்த‌ வார‌ம்
           ஆர‌வார‌மாய்
           சொம்பு த‌ண்ணீரில்
           ஆர‌ம்பித்து.....
           எல்லாம் மாற்ற‌மில்லாம‌ல்

           என்ன‌வ‌ன் ம‌ட்டும்
           வேறோரு பெய‌ரில்...