Saturday, May 23, 2009

தெரிந்தோ!தெரியாம‌லோ!


தெரிந்தோ!தெரியாம‌லோ!

தெரிந்தோ தெரியாம‌லோ
சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்
காய‌ப்ப‌டுதிவிடுகிறேன்

அன்பாய் பேசினாலும்
அத‌ட்டுகிறேன் அம்மாவை‌

அநாவ‌சிய‌மாய் அழுது
அட‌ம்பிடித்து அப்பபாவை

பிடிக்கும் என‌ தெரிந்தும்
ஒன்றுமில்லாம‌ல் சாப்பிட்டு அக்காவை

பிடிக்காது என‌ தெரிந்தும்
எதிர்த்து பேசி அண்ண‌னை

என்னிட‌ம் இருந்தும் த‌ர‌மாட்டேன்
என‌ சொல்லி தம்பியை

தெரிந்தோ தெரியாம‌லோ
ச‌ண்டையிட்டு என் ந‌ண்ப‌ர்க‌ளை....

காய‌ம் என்ன‌வோ அவ‌ர்க‌ளுக்குதான்
க‌ண்ணீர் வ‌ருவ‌து ம‌ட்டும்
என் க‌ண்ணில்!

எப்ப‌டி புரிய‌ வைப்பேன் நான்
தெரியாம‌ல் தான்
செய்தேன் என்ப‌தை....

தெரிந்தே ந‌டிக்கிறார்க‌ளோ?
நான் அழ‌வேண்டும் என்று