இறைவா காப்பாற்று!
இன்று
சரஸ்வதி பூஜை என
மனது படபடக்கிறது
சாமி முன்னால் படைக்கபட்டது
சுண்டல் மட்டுமா?
என் புத்தகமும் அல்லவா
உள்ளிருக்கும்
மதிப்பெண் அட்டை
வெளியில் எட்டிப்பார்த்தால்
தேங்காய் உடைக்கப்படப்போவது
என் உச்சந்தலையில்
என்று தெரிந்தும்
பஹவானே பரிட்சையில்
பதில் தெரியாமல் முளிக்கும்
பக்கத்து பெஞ்ச்
பையனைபோல்
நீயும் கண்ணை
உருட்டிக்கொண்டிருக்காமல்
எப்படியாவது என்னை
காப்பாற்று!