2009/6/1 chillu karupatti <chilludhosth007@gmail.com>
பொய் முகங்கள்
அரக்க பறக்க அவசரமாய்
உடை மாற்றி
வெள்ளை பவுடரை பூசும் முன்_என்
முகம் பார்க்கிறேன்
நிலைக்கண்ணாடியில் ஒருமுறை
திரைபோட்டு மறைத்துக்கொண்டு
கிளம்புகையில்..வெளியில் போகிறோம் என் தெரிந்தும்
மறுமகளுக்கு பரிந்துபேசியதறகாக_தலை
வாசலை அடைத்து கொண்டு
குந்தானி போல் அமர்ந்திருக்கும்
பக்கத்து வீட்டு பெரியம்மாவின்
செயற்கை சிரிப்பில் தெரிகிறது
என் மேல் உள்ள உச்சகட்ட கோபம்
இங்கு ஆரம்ப மாகிறது பொய் முகங்கள்தட தடவென படி இறங்கி
தெருவை தொடுகையில்
வேட்டி ஈரம் தரையில் சொட்ட சொட்ட
பின்னந்தலை சொரிந்து கொண்டு
சிவன் கோவில் அர்ச்சகர் சங்கரன் சுவாமிகள்
வேண்டுமென்றே இளநீர் நெட்டியை
கழிவு வாய்க்காலில் போட்டு விட்டு
தண்ணீர் தேங்குகிறதென முகம் சுளித்து
கடிந்து கொள்கிறார்
துப்புரவு தொழிலாளியிடம்!ஒன்றுக்கு இரண்டாய் லாபம் கண்டும்
ஈரடுக்கு மாடி கொண்டும் தீரவில்லைபல்லை மட்டும் தேய்த்து விட்டு_ பகட்டாய்
நெற்றியில் விபூதியுடன்
கல்லாவில் அமர்ந்திருக்கும்
பலசரக்கு கடை அண்ணாச்சிக்கு பணத்தாசை
பால் பாக்கெட்டிற்கு ஐம்பது பைசா
குறைகிறதென வெடுக்கென பிடிங்கிக் கொண்டு
வெறுங்கையோடு விரட்டுகிறார்
வயதானமூதாட்டியை!நிச்சயமாய் இந்த நாட்டுப் பிரஜைதான்
கடைத்தெருவில் வருவோர்
போவோரிடம் கைநீட்டி
எக்ஸ்கியூஸ் மி டூ ருப்பீஸ் ப்லீஸ்_என்று
குத்து விழுந்த ரெக்கார்டாய் வசனம் பேசி
பிச்சை எடுக்கிறாள் பைத்தியக்கார பெண்
சித்தம் தெளிந்த உறவுகள் செய்த
சிறப்பான முயற்சி
நாடு கடத்துதல் போல்_இது
மாநிலம் கடத்துதலின் விளைவு!நாலே எட்டில் நடுரோடு தாண்டி
நடந்தே செல்கிறேன்
நாலு காசு சம்பாதிக்க
ஒவ்வொரு வினைக்கும்
அதற்கு சமமான எதிர் வினை உண்டாமே
பொய்யாக்கி செல்கின்றன
என் புன்னகைக்கு பதிலிருக்கும்
சக மனிதர்களின் திருமுகங்கள்
கூட்டுங்கள் கட்ட பஞ்சாயத்து
நியூட்டனுக்கு_நான்
உண்மையாகத்தானே சிரித்தேன்
அவனை களுவில் ஏற்ற
மனம் வரவில்லை எனக்கு!எப்படியும் எட்டு மணி நேரம்
பல்லை காட்டிக்கொண்டு
கழிகிறது பகற்பொழுது
பக்கத்து இருக்கையில் குளிக்காமல்
வந்தவரை கூட சொல்ல முடியாமல்
புளுங்கி போகிறது உள்ளம்
இது எதையும் உள் வாங்காதே
என சொல்லியும்
உள்ளுக்குள் மறக்காமல்
மறைத்து வைக்கிறது என் மனது
என்னிடமும் பொய் முகம் காட்டி!
Oh is it super Vignesh thanks
ReplyDelete